இந்தியா – பாகிஸ்தான் இடையே உருவான போர் சூழ்நிலை: முக்கிய தகவல்கள்

Spread the love

பஹல்காம் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில், பாகிஸ்தான் பகுதியிலுள்ள 9 பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக வெகுஆகிரம தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து, பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவின் 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்தியாவின் உயர் தொழில்நுட்ப வான் பாதுகாப்பு அமைப்பு S-400 சுதர்ஷன் சக்ரா, பாகிஸ்தானின் ஏவுகணைகளை வானிலேயே அழித்து, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

மேலும், இந்திய ராணுவம் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார் மையங்களை தாக்கி அதனை செயலிழக்கச் செய்துள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலை:

  • இன்று இரவு 9 மணியளவில், ஜம்மு காஷ்மீர் விமான நிலையங்களை குறிவைத்து பாகிஸ்தான் 8 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
  • இந்தியாவின் S-400 பாதுகாப்பு அமைப்பு, அவற்றை வானிலேயே தடுக்கின்றதோடு, பதிலடி வழங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ராஜஸ்தான் எல்லை பகுதிகளிலும் தாக்குதல் இடம்பெற்று, இந்தியா பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.

மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள்:

  • காஷ்மீர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சைரன் ஒலி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியா தனது போர் கப்பல்களை கராச்சி திசையில் நகர்த்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அறிவிக்கப்படாத போர் தொடங்கியுள்ளதாக உத்தியோகபூர்வமாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *