யாழ்ப்பாணம் மயிலிட்டியில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 2,400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நான்காவது நாளாக தொடர்கிறது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக (செவ்வாய்க்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2,400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரி
நாட்கள் கடந்தும் உரிய பதில் இல்லாததால், காணி உறுதிகளை கையிலே எடுத்துக்கொண்டு, இன்று அவர்கள் தங்கள் உரிமையை வலியுறுத்தும் விதத்தில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர்.

இப்போராட்டம் கடந்த சனிக்கிழமை (மயிலிட்டி சந்தியில்) ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதல் நாளிலிருந்தே மக்கள் அங்கு தங்கியிருந்து உணவு சமைத்து, அருந்தி, விடத்தை விட்டு நகராமல் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
காணிகளைப் பிற்படுத்த முடியாது என்ற தீர்மானத்துடன், தங்களது வாழ்வாதாரத்திற்கும் அடையாளத்திற்குமான உரிமையை மீட்க போராட்டக்காரர்கள் உறுதியுடன் முன்னேறி வருகின்றனர்.
இந்த நிலைமைக்கு அரசாங்கம் எப்போது பதிலளிக்கிறது என்பதையே மக்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.
நன்றி