டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிர்ப்பு: கலிபோர்னியாவில் தீவிரமான போராட்டம், ஊரடங்கு உத்தரவு பிறப்பு

Spread the love

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பின்பற்றும் கடுமையான குடியேற்ற கொள்கைக்கு எதிர்ப்பு கிளப்பியுள்ளன. இதன் விளைவாக கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

வெளிநாட்டு குடியேற்றிகளை நாடு கடத்தும் நடவடிக்கையை சட்டவிரோதமாகவும் மனிதாபிமானமற்றதுமானதாகவும் கண்டித்து, மக்கள் தொடர்ந்து 5வது நாளாக சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போராட்டம் வன்முறைக்கு மாறி, வாகனங்கள் எரிக்கப்பட்டன, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன.

பாதுகாப்புப் படையினர், போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தினர். இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சலஸ் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் 2,000 ராணுவ வீரர்கள், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் கலிபோர்னியா மாகாணத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக ஆளுநர் கவின் நியூசம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்பின் இந்த செயல்முறையை “சட்டவிரோதம்” என்றும், கலவரத்தை மேலும் தூண்டும் நடவடிக்கையாக என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த போராட்டம் இலினாய்ஸ், ஜார்ஜியா, வாஷிங்டன் டி.சி. உள்ளிட்ட பிற மாகாணங்களிலும் பரவி தேசிய அளவில் வலுப்பெற்று வருகிறது.

இதன் விளைவாக டிரம்ப் அரசு கடும் அரசியல் அழுத்தத்திற்கு முகம்கொடுத்து வருகிறது.

நன்றி

தமிழ் தகவல் வலைத்தளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *