யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாக விளங்கும் பல்கலைக்கழகப் பேரவையின் உறுப்பினராக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளரும், முன்னாள் யாழ். மாவட்ட செயலருமான கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் 2024 மார்ச் மாதம் முதல் அமலுக்குவரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பேரவை உறுப்பினரான கலாநிதி ஏ.எம்.பி.என். அபேசிங்கவின் பதவியினை வறிதாக்கியதையடுத்து, அவரின் பதவிக்கு மாற்றாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த நியமனம், 2028 மார்ச் 4ஆம் திகதி வரை செயல்படும் வகையிலும், இலங்கைப் பல்கலைக்கழகச் சட்டத்தின் 44(55)ஆம் பிரிவின் கீழான விதிகளுக்கமைவாக வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கும், கல்வி மேம்பாட்டிற்கும் பலவகையில் பயனளிக்கக்கூடியதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி