திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று முகத்துவாரம் பகுதியில், விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய ஆயுதங்களை தேடி இன்று (ஜூன் 14) காலை அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த அகழ்வு, அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றின் காணியில் மேற்கொள்ளப்பட்டது. அந்த இடத்தில் ஆயுதங்கள் இருக்கலாம் எனக் கிடைத்த தகவலையடுத்து, பெக்கோ இயந்திரம் கொண்டு அகழ்வு பணி தொடங்கப்பட்டது.
தகவலுக்கமைய, இது விடுதலைப் புலிகளால் போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருக்கக்கூடிய சந்தேகத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
ஆனால், தடையாலான எந்தவொரு பொருட்களும் அதில் இருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மூதூர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில், சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
நன்றி