காசா: உணவுப் பொருட்கள் கொள்ளை – ஐ.நா. குற்றச்சாட்டு, பரபரப்பு நிலை

Spread the love

காசாவிற்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் தீவிரவாதிகளால் வழிமறிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுவதால், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையால் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றன. கடந்த 11 வாரங்களாக காசாவின் மீது அமல்படுத்தப்பட்டிருந்த போர்நிறுத்த அறிவிப்பு, மே மாத மத்தியப்பகுதியில் இஸ்ரேலால் திரும்பப் பெறப்பட்டது. இதனையடுத்து, மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க அரசியல் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன.

காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், சிறுவர்களிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில்தான் அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட காசா மனிதாபிமான அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் உதவிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்தி, மக்களை வலுக்கட்டாய இடம்பெயர்ச்சிக்கு உள்ளாக்குவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மாறாக, ஐ.நா தலைமையிலான உதவிகளை ஹமாஸ் அமைப்பு வழிமறித்து கொள்ளையடிப்பதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் குற்றம்சாட்டுகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளை ஹமாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

போர்நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டு மூன்று வாரங்கள் ஆகியும், காசாவிற்கு மிகக் குறைந்த அளவிலேயே கோதுமை மாவு அனுப்பப்படுவது வருத்தமளிப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்நிலையில், கெரெம் ஷாலோம் சோதனைச் சாவடி வழியாக இப்போதுவரை வெறும் 4,600 மெட்ரிக் டன் கோதுமை மாவே அனுப்பப்பட்டுள்ளது என ஐ.நா. துணை செய்தித் தொடர்பாளர் ஃபஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

நன்றி

தமிழ் தகவல் வலைத்தளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *