ஈரானை குறிவைத்து குறு அணுகுண்டை பயன்படுத்தினால் பேரழிவு ஏற்படும் என ரஷ்யா எச்சரிக்கை

Spread the love

ஈரானை கட்டுப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா குறு அணுகுண்டை (Tactical Nuclear Weapon) பயன்படுத்தும் நிலைக்கு செல்லக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், ரஷ்யா கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ரஷ்யா தெரிவித்துள்ளதாவது:

குறு அணுகுண்டு என்பது, வெப்பத்தையும் கதிர்வீச்சையும் ஏற்படுத்தும், மனித உயிர்களை அழிக்கக்கூடிய ஆபத்தான அணுவாயுத் திறன் கொண்ட ஆயுதம். இது உடனடி மரணங்களை மட்டுமன்றி, பல தலைமுறைகள் பிறக்கும் குழந்தைகளுக்கும் உடல் மற்றும் மனப்பாங்கு குறைபாடுகளை ஏற்படுத்தும்.”

குறு அணுகுண்டை

மேலும்,

“காற்று வீசும் திசையில் இந்த கதிர்வீச்சு பரவி, சுற்றியுள்ள நாடுகளிலும் மக்கள் வாழ்வாதாரத்தையும் சூழலையும் அழிக்கும் அளவிற்கு தொடர்பேரழிவை உருவாக்கும். எனவே, ஈரானை குறிவைத்து எந்தவிதமான அணு ஆயுதங்களும் பயன்படுத்தப்படக்கூடாது” என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.

இந்த சூழ்நிலை, உலக அளவில் அணு ஆயுதங்களின் விளைவுகள் குறித்து புதிய கவலையை கிளப்பியுள்ளது. தூய்மை மற்றும் நிலையான உலகத்திற்காக, அனைத்து நாடுகளும் அணு ஆயுதங்களை தவிர்க்கும் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய அவசியம் அதிகமாகியுள்ளது.

நன்றி

தமிழ் தகவல் வலைத்தளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *