நீட் தேர்வு முறையே ஒழுக்கமான ஊழல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

Spread the love

சென்னை:
மத்திய அரசு நாடு முழுவதும் அறிவித்து நடத்தும் நீட் தேர்வு (NEET) மீதான விமர்சனங்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

நீட் தேர்வு ஆதி முதல் அந்தம் வரை

தரம், தரம் என்றார்கள்! ஆனால் நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணமே பேசுகிறது. இது ஒரு ஒழுக்கமான ஊழல் என்று தான் அழைக்கப்படவேண்டும்!

மகாராஷ்டிராவில், நீட் PG 2025 தேர்வில் முறைகேடு செய்து ₹90 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க உதவியதாக ஒரு மருத்துவருக்கு எதிராக CBI வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவே நீட் முறையின் உண்மையான முகம். தேர்வு நடைபெறும் ஒவ்வொரு கட்டத்திலும் — வினாத்தாள்கள் தயாரிப்பு, தேர்வறை மேலாண்மை, முடிவுகள் வெளியீடு — அனைத்திலும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நிறைந்துள்ளன.

நீட் முதல் கோணல், முற்றிலும் கோணல்!

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக மாநாடுகளில் காட்சிப்பொருளாக உட்காரும் அதிமுகவினர், இத்தகைய முறைகேடுகளுக்கு எதிராக அவர்களது எஜமானர்களிடம் பேச நேரமும், மானமும் இல்லாதவர்கள்!” என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு

நீட் தேர்வு முறையை நீக்கி, மாநில அரசுகளுக்கே உயர் கல்வி மாணவர் சேர்க்கை முழு அதிகாரம் வழங்க வேண்டும் என்ற திமுக அரசின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த விமர்சனம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து வரும் அரசியல் மற்றும் சமூக அமைப்புகள், இந்தக் கோழை நடவடிக்கைகள் மற்றும் ஊழலை சுட்டிக்காட்டி, மாநில மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டியதைக் கட்டாயமாக்கி வருகின்றன.

நன்றி

தமிழ் தகவல் வலைத்தளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *