நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இதில், அவலாஞ்சியில் அதிகபட்சமாக 29.2 செ.மீ பதிவு.
மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு வருமாறு:
- அப்பர் பவானி – 16.8 செ.மீ
- பார்சன்ஸ்வேலி – 13.2 செ.மீ
- பந்தலூர் – 13 செ.மீ
- சேரங்கோடு – 11.8 செ.மீ
- போர்த்தி மந்து – 9.4 செ.மீ
- எமரால்டு – 5.7 செ.மீ
- தேவாலா – 5.2 செ.மீ
இந்த மழையால் மாவட்டத்தின் அணைகளில் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம், பருவமழை சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மக்கள் அவசியமான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
நன்றி