விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் காயம்

Spread the love

விருதுநகர் மாவட்டம், அரசகுடும்பன்பட்டி:
அரசகுடும்பன்பட்டியில் செயல்பட்டுக் கொண்டிருந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.

இந்த விபத்தில் குல்லூர்சந்தையைச் சேர்ந்த சங்கிலி (வயது 40) என்பவர் படுகாயமடைந்து, உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து ஏற்பட்டதும் அருகிலுள்ள தொழிலாளர்களும், பொதுமக்களும் விரைந்து விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு ஆலைகள் உள்ளிட்ட அபாயகரமான தொழிற்சாலைகளில் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட வேண்டிய அவசியம் மேலும் வலியுறுத்தப்படுகிறது.

நன்றி

தமிழ் தகவல் வலைத்தளம்

One thought on “விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் காயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *